Please drop your feedbacks to Alltamillyrics@gmail.com

Thursday, March 9, 2017

வானம் பறந்து பார்க்க ஏங்கும் பாடல் வரிகள் Vaanam Paranthu parka yengum Power Paandi lyrics

வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதா..
ஓடும் நதியினிலே ஓடம்
ஓய்ந்து கரையை தேடுதா..
என்றும் இவனும் குழந்தையா..
வார்த்தை இன்னும் மழலையா..
சிரிப்பில்  இதயம் பொங்குதே.
கருணை சிந்துதே...
காற்று மழையில் மோதலாம்,அந்த கடலில் சேரலாம்.
இந்த குழந்தை கூட்டத்தில் இவனும் தென்றலே..
மன்னாதி மன்னா..வீராதி வீரா.
எங்கள் நண்பா பாண்டி...
விளையாடும் சிங்கம் விலையில்லா தங்கம்..
எங்கள் நண்பா பவர் பாண்டி..
புதிய வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதா..
வாழ்க்கையே என்றுமே எதையோ தேடும் பயணம். இறுதியில் அடைக்கலம் பேரன் பேத்தி ஜனனம்..
தேடினோம் ஓடினோம்....
எத்தனை கனவு... ஓய்ந்து போய் சாய்வது குழந்தை இருக்கும் கூடு...
இதுதான் சுகமா.. கடவுளின் வரமா...
கண்களின் கண்ணீர் தாலாட்டுமா
தாயும் இல்லை,தாரமும் இல்லை.
மகனின் மகளே நீ ஓடிவா
தோளில் ஓன்று மடியில் ஓன்று உணர்ந்தால் மட்டும் புரியும்..
உயிர் மட்டும் ..இது போதும்..
வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதா..
ஓடும் நதியினிலே ஓடம்
ஓய்ந்து கரையை தேடுதா..
என்றும் இவனும் குழந்தையா..
வார்த்தை இன்னும் மழலையா..
சிரிப்பில்  இதயம் பொங்குதே.
கருணை சிந்துதே...
காற்று மழையில் மோதலாம்,அந்த கடலில் சேரலாம்.
இந்த குழந்தை கூட்டத்தில் இவனும் தென்றலே..
மன்னாதி மன்னா..வீராதி வீரா.
எங்கள் நண்பா பாண்டி...
விளையாடும் சிங்கம் விலையில்லா தங்கம்..
எங்கள் நண்பா பவர் பாண்டி..
புதிய வானம் பறந்து பார்க்க ஏங்கும்
பூக்கள் சிறகை நீட்டுதா..

No comments:

Post a Comment